வைரலாகும் “ஆணவம்” தமிழ் குறும்படம் – பார்வையும் விமர்சனமும்
குடும்ப வாழ்க்கையில் புரிதலும் மரியாதையும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “ஆணவம்” தமிழ் குறும்படம், தற்போது தங்கத்தமிழன் ஷார்ட் பிலிம் யூட்யூப் சேனலில் வைரலாகி வருகிறது.
இந்த குறும்படம் கிராமத்து வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு இளைஞன் கிராமத்து பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். திருமணத்திற்கு பிறகு, அந்த பெண்ணை மனைவியாக அல்லாமல் ஒரு அடிமை போல நடத்த தொடங்குகிறான்.
Also
Read:காசுக்காக ஒரு கல்யாணம், பணமும் திருமணமும் விமர்சனம்
இதற்கிடையில், அவர் வேலை செய்யும் இடத்தில் மற்றொரு பெண்ணுடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறார். கணவனின் இந்த நடத்தை குறித்து தெரிந்து கொள்ளும் மனைவி மனவேதனை அடைகிறார். பின்னர் கணவனின் செல்போனை பார்த்த போது, அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வருகிறது. இதைக் கண்டு அவள் கதறி அழுகிறாள்.
ஆனால், அதற்கு கணவன் “ஆம்பளைனா அப்படித்தான் இருப்பான்… இதெல்லாம் நீ கண்டுகொள்ளக்கூடாது” என்று கூறி அவளை தாக்குகிறார். இந்த காட்சி குடும்பத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும் சமூக மனநிலையையும் வெளிப்படுத்துகிறது.
அடுத்த நாள் மாலை, கணவன் வீட்டிற்கு வரும்போது, மனைவி சோபாவில் அமர்ந்து கொண்டு வேறொரு ஆணுடன் பேசுவது போல நடிக்கிறாள். “என் கணவர் யாருடன் பேசினாலும் கேட்கக்கூடாது என்று கூறிவிட்டார். அதனால் நான் யாருடன் பேசினாலும் அவர் கேட்க மாட்டார். நீ வீட்டிற்கு வா, நாம் இருவரும் ஜாலியாக இருக்கலாம்” என்று கணவன் கேட்கும்படி பேசுகிறாள்.
இந்த வார்த்தைகளை கேட்ட கணவன் ஆத்திரத்தில் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த கட்டையை எடுத்து மனைவியின் தலையில் அடிக்கிறான். அவள் தரையில் சரிந்து விழுகிறாள்.
அந்த நேரத்தில், அவள் பேசிக்கொண்டிருந்த போனிலிருந்து ஒரு சத்தம் கேட்கிறது. அதைக் கவனமாக கேட்கும் போது, அவள் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. “நான் கொடுத்த ஐடியா சக்ஸஸ்சா? இனிமே பாரு, சாகும் வரை எந்த பெண்ணையும் பார்த்து பேச மாட்டான்” என்று தோழி பேசுவது கணவனின் காதுகளில் விழுகிறது.
அதை கேட்ட கணவன் தன் தவறை உணர்ந்து கதறி அழுகிறான்.
ஆணவத்தை அழிக்க சட்டங்களும் திட்டங்களும் உருவாக்கப்பட்டாலும், சமூகத்தில் இன்னும் ஆணவ மனப்பான்மை தொடர்ந்துகொண்டே இருப்பதை இந்த குறும்படம் வலியுறுத்துகிறது. குடும்பத்தில் சமத்துவமும் பரஸ்பர மரியாதையும் அவசியம் என்பதை வலுவாக சொல்லும் ஒரு சமூக விழிப்புணர்வு படைப்பாக இந்த குறும்படம் அமைந்துள்ளது.
