சினிமாவில் வாய்ப்பு குறைந்த காலத்தில் குடும்பத்திற்காக வேறு வேலை செய்ததாக நடிகர் அபாஸ் மனம் திறந்து பேசியுள்ளார். அவரது வாழ்க்கை போராட்டம் ரசிகர்களை நெகிழச்செய்துள்ளது.
நடிகர் அப்பாஸ் வாழ்வில் நடந்த வலிகளை வெளிபடையாக பேசி உள்ளார்
![]() |
| நடிகர் அப்பாஸ் |
தமிழ் சினிமாவில் 1990 மற்றும் 2000களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் அபாஸ். காதல் மற்றும் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்த அவர் ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றார்.
சினிமாவில் வாய்ப்பு குறைந்தபோது:
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து நடிகர் அபாஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.
சினிமாவில் ஒரு காலத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தாலும் பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததாக அவர் கூறினார். அந்த காலம் தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான காலமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
வேறு வேலைகளில் ஈடுபட்டு அப்பாஸ்:
குடும்பத்தை நடத்த வேண்டிய அவசியம் காரணமாக சினிமாவைத் தவிர்த்து வேறு வேலைகளிலும் ஈடுபட்டதாக அபாஸ் கூறினார். எந்த வேலை செய்தாலும் அது அவமானம் அல்ல. குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவது முக்கியம் என்ற மனப்பான்மையுடன் தான் வேலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
விளம்பரங்களில் நடித்த அனுபவம்:
மேலும் சில ஆண்டுகள் நீண்ட விளம்பர ஒப்பந்தங்களில் பணியாற்றி வாழ்க்கையை முன்னெடுத்ததாகவும் கூறினார். சினிமா வாய்ப்புகள் நிரந்தரமில்லை என்பதால் வாழ்க்கையில் வரும்
மாற்றங்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொழில்களில் தாழ்வு இல்லை:
தற்போது நடிகர் அபாஸ் மீண்டும் சினிமாவில் சிறிய மற்றும் கேரக்டர் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை அனுபவங்கள் பலருக்கும் ஊக்கமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also

